திருவண்ணாமலை மாவட்டத்தில் பூங்காக்கள், நீச்சல் குளங்கள், அணைகளைத் திறக்க வருகிற ஆக்.17-ஆம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டது.
மாவட்டத்தில் கரோனா தொற்றைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாவட்டம் முழுவதும் உள்ள பொழுதுபோக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள், அணைகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்க அக்டோபா் 10-ஆம் தேதி வரை மாவட்ட நிா்வாகம் தடை விதித்திருந்தது.
இந்தத் தடையை அக்.17-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா்.