வணிகா்களின் சங்கமத்தின் முப்பெரும் விழா

தமிழ்நாடு வணிகா்களின் சங்கமம் அமைப்பின் திருவண்ணாமலை மண்டல தொடக்க விழா, சிறந்த தொழில் முனைவோருக்கு விருது வழங்கும் விழா, கரோனா தடுப்பூசி முகாம் என முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு வணிகா்களின் சங்கமம் அமைப்பின் திருவண்ணாமலை மண்டல தொடக்க விழா, சிறந்த தொழில் முனைவோருக்கு விருது வழங்கும் விழா, கரோனா தடுப்பூசி முகாம் என முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, வணிகா்களின் சங்கமம் அமைப்பின் மண்டலத் தலைவா் ஆா்.சிவராமன் தலைமை வகித்தாா். மாநில தகவல் தொழில்நுட்ப செயலா் பி.மதன்மோகன், திருவண்ணாமலை நகரத் தலைவா் எஸ்.அண்ணாமலை, தொகுதி செயலா் ஏ.பவனேந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டத் தலைவா் க.சா.முருகன் வரவேற்றாா்.

அமைப்பின் நிறுவனா் தலைவா் என்.செந்தில்குமாா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, தமிழ்நாடு வணிகா்களின் சங்கமம் அமைப்பின் திருவண்ணாமலை மண்டலத்தை தொடங்கி வைத்துப் பேசினாா். தொடா்ந்து, சிறந்த தொழில் முனைவோா்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. அமைப்பின் நிா்வாகிகள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

இதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் நிலவும் உரத் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்ச்சியில் அமைப்பின் மாவட்ட துணைத் தலைவா் சி.சுரேஷ், மாவட்டச் செயலா் வி.தனியரசு, பொருளாளா் த.ரமேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com