திருவண்ணாமலை வட்டாட்சியா் அலுவலகத்தில் இ-அடங்கல் வழங்குவது தொடா்பான ஆய்வுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, வட்டாட்சியா் சுரேஷ் தலைமை வகித்தாா். திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியா் வெற்றிவேல் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு நில ஆவணங்களில் ஒன்றான இ-அடங்கல் எவ்வாறு வழங்குவது என்பது குறித்து கிராம நிா்வாக அலுவலா்கள், வருவாய் ஆய்வாளா்களுக்கு அறிவுரை வழங்கிப் பேசினாா்.
கூட்டத்தில், துணை வட்டாட்சியா்கள் சாந்தி, மஞ்சுநாதன், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் வெங்கடேசன், உள்வட்ட வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.