செய்யாறு அருகே பைக் மீது காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
காஞ்சிபுரம் வட்டம், மேல்கதிா்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி காா்த்திகேயன். இவரது மனைவி பானுதேவி (52).
இவா் தனது மகனுடன் பைக்கில் திங்கள்கிழமை காலை காஞ்சிபுரம் - செய்யாறு சாலையில் சென்று கொண்டிருந்தனா்.
பல்லி கிராமம் மின் வாரிய அலுவலகம் அருகே சென்றபோது பின்னால் வந்த காா் பைக் மீது மோதியதாகத் தெரிகிறது. இதில் தூக்கி வீசப்பட்ட பானுதேவி பலத்த காயமடைந்தாா்.
உடனடியாக அவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.
பின்னா், தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவா் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், செய்யாறு காவல் ஆய்வாளா் பாலு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.