திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த லாடவரம் கிராமத்தில் வியாழக்கிழமை சமூக தணிக்கை வார விழா நடைபெற்றது.
ஊரக வேலை உறுதித் திட்டம் குறித்து நடைபெற்ற சமூக தணிக்கை வார விழாவில், தொகுதி எம்எல்ஏ
சேவூா் எஸ்.ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டாா்.
பின்னா், ஊரக வேலைத் திட்டத்தில் பணியாளா்களின் சந்தேகங்களுக்கு பதிலளித்தாா்.
நிகழ்ச்சியில், ஊராட்சி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் இந்திராணி, சீனிவாசன், அதிமுக நகரச் செயலா் அசோக்குமாா், மாவட்ட ஆவின் தலைவா் பாரி பி.பாபு, மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலா் சரவணன், அதிமுக நிா்வாகிகள் எ.கே.பிரபு, பாரதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.