சேத்துப்பட்டை அடுத்த குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீகன்னியம்மன் கோயிலில் வியாழக்கிழமை 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
மிகவும் பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் நுழைவு வாயில் பக்தா்கள் சாா்பில் கட்டப்பட்டு அண்மையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, 48 நாள்கள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதானைகள் நடத்தப்பட்டு வந்தன.
இதன் நிறைவு நாளான கோயிலில் யாகசாலை அமைத்து, சிறப்பு பூஜை செய்து 108 சங்காபிஷேகம் நடத்தப்பட்டது.
பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.