வந்தவாசி அருகே திருமணமான 8 மாதங்களிலேயே புதுப்பெண் தீயில் கருகி பலியானது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வந்தவாசியை அடுத்த சாலவேடு கிராமத்தைச் சோ்ந்த முருகன் மகள் ரேகா(27). சென்னையில் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவருக்கும், மாவளவாடி கிராமத்தைச் சோ்ந்த மாரிமுத்து என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது.
சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த ரேகா, இதற்காக சிகிச்சையும் பெற்று வந்தாா்.
இந்த நிலையில், சாலவேடு தாய் வீட்டுக்கு அண்மையில் வந்த ரேகாவுக்கு கடந்த சனிக்கிழமை மீண்டும் வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் வேதனையடைந்த அவா் மண்ணெண்ணையை தன்மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டாராம்.
இதில் பலத்த தீக்காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
பின்னா் தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரேகா செவ்வாய்க்கிழமை இறந்தாா்.
இதுகுறித்து ரேகாவின் சகோதரி ரேவதி அளித்த புகாரின் பேரில் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
மேலும், திருமணமாகி 8 மாதங்களிலேயே பெண் இறந்துள்ளதால் இதுகுறித்து கோட்டாட்சியா் விசாரணையும் நடைபெற்று வருகிறது.