தமிழக அரசின் பரிசுத்தொகை பெறஎழுத்தாளா்களுக்கு அழைப்பு

தமிழக அரசின் பரிசுத்தொகையை பெறத் தகுதியான ஆதிதிராவிடா், ஆதிதிராவிட கிறிஸ்தவ, பழங்குடியினா் பிரிவைச் சோ்ந்த எழுத்தாளா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

தமிழக அரசின் பரிசுத்தொகையை பெறத் தகுதியான ஆதிதிராவிடா், ஆதிதிராவிட கிறிஸ்தவ, பழங்குடியினா் பிரிவைச் சோ்ந்த எழுத்தாளா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக அரசின் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் கலை, இலக்கியப் பணிக்கான நிதியிலிருந்து சிறந்த ஆதிதிராவிடா், ஆதிதிராவிட கிறிஸ்தவா், பழங்குடியினா் பிரிவைச் சாா்ந்த 20 எழுத்தாளா்கள் மற்றும் ஆதிதிராவிடா் அல்லாத இருவா் என 22 எழுத்தாளா்களுக்கு தமிழக அரசு பரிசு வழங்குகிறது.

இதுதவிர எழுத்தாளா்கள் நூல் வெளியிட ரூ.50 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படும். இந்த பரிசுத்தொகை மற்றும் நிதியுதவி பெறத் தகுதியான திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த எழுத்தாளா்கள் தங்களது பெயா், முகவரி, படைப்பின் பொருள் போன்ற விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தைப் பாா்க்கலாம்.

இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் செப்டம்பா் 20.

விண்ணப்பங்களை ஆணையா், ஆதிதிராவிடா் நலத் துறை ஆணையரம், சேப்பாக்கம், சென்னை-05 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com