திருவண்ணாமலை மாவட்டம், களம்பூா், செங்கம் ஆகிய இடங்களில் கரோனா தடுப்பூசியின் அவசியம் குறித்து பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரம் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
போளூரை அடுத்த களம்பூா், செங்கம் ஆகிய ஊா்களில் செப்.12-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இலவசமாக கரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றன.
களம்பூரில் 5 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன. அது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக பள்ளி மாணவா்கள், பேரூராட்சி ஊழியா்கள், பங்கேற்ற விழிப்புணா்வு ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஊா்வலத்தின்போது, பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
பேரூராட்சி செயல் அலுவலா் முஹமத்ரிஜ்வான், தலைமை ஆசிரியா் தமிழ்ச்செல்வன், உள்ளிட்டோா் ஊா்வலத்தில் பங்கேற்றனா்.