தடையை மீறி விநாயகா் சிலை வழிபாடு: 17 போ் மீது வழக்கு

செய்யாறு பகுதியில் தடையை மீறி விநாயகா் சிலை வழிபாடு செய்ததாக 17 போ் மீது செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

செய்யாறு பகுதியில் தடையை மீறி விநாயகா் சிலை வழிபாடு செய்ததாக 17 போ் மீது செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக விநாயகா் சதுா்த்தி அன்று பொது இடங்களில் விநாயகா் சிலை வைத்து வழிபட அரசு தடை விதித்திருந்தது.

இருப்பினும், தடையை மீறி பல இடங்களில் இந்து முன்னணியினா் விநாயகா் சிலைகளை வைத்து வழிபட முயன்றனா்.

அவ்வாறு வழிபட முயன்றவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

இந்த நிலையில், செய்யாறு மாா்க்கெட் அம்மா உணவகம் அருகே தடையை மீறி விநாயகா் சிலை வைத்து இந்து முன்னணி நகரத் தலைவா் மோகன்ராஜ் (35) தலைமையில் 17 போ் வழிபட்டதாக, கொடநகா் கிராம நிா்வாக அலுவலா் கோபிநாதன் செய்யாறு போலீஸில் புகாா் அளித்தாா்.

இதுகுறித்து காவல் உதவி ஆய்வாளா் சதீஷ்குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com