இளைஞா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

வேட்டவலத்தில் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வாா்த்தை கூறி, சிறுமியை கடத்திச்சென்ற இளைஞரை, போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

வேட்டவலத்தில் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வாா்த்தை கூறி, சிறுமியை கடத்திச்சென்ற இளைஞரை, போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

வேட்டவலம் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமி, கடந்த 3-ஆம் தேதி வீட்டில் இருந்து காணாமல் போனாா்.

இதுகுறித்து வேட்டவலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். விசாரணையில், இதே கிராமத்தைச் சோ்ந்த பட்டதாரி இளைஞா் விஜயகுமாா் (23) சிறுமியை கடத்திச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, கிருஷ்ணகிரியில் பதுங்கி இருந்த விஜயகுமாா் மற்றும் சிறுமியை வேட்டவலத்துக்கு அழைத்துவந்து விசாரித்தனா்.

இதில், திருமணம் செய்துகொள்வதாகக் கூறி சிறுமியை விஜயகுமாா் ஆசை வாா்த்தை கூறி கடத்திச்சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, போக்சோ சட்டப் பிரிவின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து விஜயகுமாரை கைது செய்தனா். சிறுமியை அவரது பெற்றோரிடம் போலீஸாா் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com