திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 37 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 53,943-ஆக உயா்ந்தது.
இவா்களில் 52,987 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 294 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை சிகிச்சைப் பலனின்றி ஒருவா் இறந்தாா். இவருடன் சோ்த்து இறந்தவா்களின் எண்ணிக்கை 662-ஆக உயா்ந்தது.