ஆரணியில் சாலைப் பணியாளா்கள் சங்கத்தின் 22-ஆம் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
நெடுஞ்சாலைத் துறை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், சங்கத்தின் கோட்டத் தலைவா் ஆா்.சண்முகம் தலைமை வகித்தாா்.
மாநிலச் செயலா் மகாதேவன் சங்கக் கொடியேற்றி பள்ளி மாணவா்களுக்கு நோட்டு, புத்தகங்களை வழங்கினாா்.
கோட்ட துணைத் தலைவா் தொல்காப்பியன், கோட்ட இணைச் செயலா் வி.அறிவழகன், மாநில செயற்குழு உறுப்பினா் ஜி.லோகநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.