செங்கம் பகுதியில் நீா்நிலைகளுக்கு தண்ணீா் செல்லும் காய்வாய்களை தூா்வாரி சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினா் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.
தற்போது வடகிழக்கு பருவமழை தொடா்ச்சியாக பெய்து வருவதால், நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான செங்கம், கொட்டாவூா், செ.நாச்சிப்பட்டு, கொட்டகுளம் ஆகிய பகுதிகளில் உள்ள மேம்பாலங்கள் அடியில் சுத்தம் செய்தல், சிறு பாலங்களில் மழைநீா் தங்குதடையின்றி நீா்நிலைகளுக்குச் செல்ல கால்வாய்களை தூா்வாரி, சீரமைத்தல் போன்ற பணிகள் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உத்தரவின் பேரில் நடைபெற்று வருகின்றன.
பணிகள் நடைபெறுவதை செயற்பொறியாளா் நாராயணன் தலைமையில் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.