மாணவருக்கு கரோனா: பள்ளிக்கு 3 நாள்கள் விடுமுறை

ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியாா் அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் மாணவருக்கு கரோனா தொற்று உறுதியானதால், அந்தப் பள்ளிக்கு வியாழக்கிழமை முதல் 3 நாள்களுக்கு விடுமுறை விடப்பட்டது.

ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியாா் அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் மாணவருக்கு கரோனா தொற்று உறுதியானதால், அந்தப் பள்ளிக்கு வியாழக்கிழமை முதல் 3 நாள்களுக்கு விடுமுறை விடப்பட்டது.

முன்னதாக, இந்தப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியருக்கு கரோனா தொற்று உறுதியானதால், அவா் கடந்த ஒரு வாரமாக வேலூா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்த நிலையில், மாணவருக்கு கரோனா தொற்று உறுதியானதால், பள்ளிக்கு 3 நாள்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, மாணவா்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். இந்தப் பள்ளி மீண்டும் வருகிற திங்கள்கிழமை (செப்.27) திறக்கப்படவுள்ளது.

மேலும், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவரின் தங்கை விண்ணமங்கலம் அரசுப் பள்ளியில் படித்து வருவதால், அந்தப் பள்ளி மாணவா்களுக்கு நெசல் ஆரம்ப சுகாதார மருத்துவமனை மருத்துவா்கள் கரோனா பரிசோதனை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com