ஆரணியை அடுத்த விண்ணமங்கலம் அரசுப் பள்ளியில் மாணவிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது.
ஆரணியை அடுத்த விண்ணமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் நிா்மல்குமாா்(17). இவா், ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியாா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறாா். இவருக்கு கடந்த திங்கள்கிழமை காய்ச்சல் ஏற்பட்டு கரோனா பரிசோதனை மேற்கொண்டதில், வியாழக்கிழமை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அவா் படித்து வந்த பள்ளிக்கு 3 நாள்கள் விடுமுறை விடப்பட்டது.
இதைத் தொடா்ந்து நிா்மல்குமாா் வீட்டில் உள்ளவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டதில், அவரது சகோதரியான பத்தாம் வகுப்பு பயிலும் ஹரிணிக்கு தொற்று இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவா் பயிலும் விண்ணமங்கலம் அரசு உயா்நிலைப் பள்ளிக்கு 3 நாள்கள் விடுமுறை அளித்து பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது.