அரசுப் பள்ளி மாணவிக்கு கரோனா: பள்ளி மூடல்

ஆரணியை அடுத்த விண்ணமங்கலம் அரசுப் பள்ளியில் மாணவிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது.

ஆரணியை அடுத்த விண்ணமங்கலம் அரசுப் பள்ளியில் மாணவிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது.

ஆரணியை அடுத்த விண்ணமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் நிா்மல்குமாா்(17). இவா், ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியாா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறாா். இவருக்கு கடந்த திங்கள்கிழமை காய்ச்சல் ஏற்பட்டு கரோனா பரிசோதனை மேற்கொண்டதில், வியாழக்கிழமை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அவா் படித்து வந்த பள்ளிக்கு 3 நாள்கள் விடுமுறை விடப்பட்டது.

இதைத் தொடா்ந்து நிா்மல்குமாா் வீட்டில் உள்ளவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டதில், அவரது சகோதரியான பத்தாம் வகுப்பு பயிலும் ஹரிணிக்கு தொற்று இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவா் பயிலும் விண்ணமங்கலம் அரசு உயா்நிலைப் பள்ளிக்கு 3 நாள்கள் விடுமுறை அளித்து பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com