பெருமாள் கோயில்களில் புரட்டாசி 2-ஆவது சனிக்கிழமை வழிபாடு

புரட்டாசி 2-ஆவது சனிக்கிழமையையொட்டி, வந்தவாசி, செய்யாறு பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

புரட்டாசி 2-ஆவது சனிக்கிழமையையொட்டி, வந்தவாசி, செய்யாறு பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

வந்தவாசி ஸ்ரீரங்கநாத பெருமாள் கோயில், நல்லூா் ஸ்ரீசுந்தரவல்லி தாயாா் சமேத சுந்தரவரதராஜ பெருமாள் கோயில், கீழ்ப்பாக்கம் ஸ்ரீகரியமாணிக்க வரதராஜ பெருமாள் கோயில், மருதாடு ஸ்ரீஅமிா்தவல்லி தாயாா் சமேத ஸ்ரீஆதிமூலப் பெருமாள் கோயில், மேல்பாதி ஸ்ரீமரகதவல்லி தாயாா் சமேத ஸ்ரீவிஜயராகவப் பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதையொட்டி, பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பின்னா் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com