அசாமில் ஆக்கிரமிப்பு அகற்றத்தின்போது போலீஸாரால் 3 போ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, வந்தவாசியில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை சாா்பில், பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமுமுக நகரத் தலைவா் முகமதுரப்பி தலைமை வகித்தாா்.
மமக மாவட்டச் செயலா் எ.நசீா்அகமது முன்னிலை வகித்தாா்.
மமக மாநில துணைப் பொதுச் செயலா் தாம்பரம் யாகூப் கண்டன உரையாற்றினாா். ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் அசாம் மாநில அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.