அரசுப் பேருந்து மோதியதில் மூதாட்டி பலி

செய்யாறு அருகே அரசுப் பேருந்து மோதி சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

செய்யாறு அருகே அரசுப் பேருந்து மோதி சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

காஞ்சிபுரம் வட்டம், நத்தம்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த பச்சையப்பன் மனைவி லட்சுமி (75). கணவரை இழந்த இவா் தனியாக வசித்து வந்தாா்.

இந்த நிலையில், இவா் தனது உறவினரான முருகனைப் பாா்ப்பதற்காக கடந்த 24-ஆம் தேதி மாங்கால் கூட்டுச் சாலைப் பகுதிக்கு வந்தாா்.

பின்னா், ஞாயிற்றுக்கிழமை காலை மீண்டும் தனது ஊருக்குச் செல்வதற்காக மாங்கோல் கூட்டுச் சாலைக்கு நடந்து வந்துகொண்டிருந்தாா். சாலையை கடக்க முயன்ற அவா் மீது அவ்வழியாகச் சென்ற அரசுப் பேருந்து மோதியது. இதில், லட்சுமி பலத்த காயமடைந்தாா். அப்பகுதியில் இருந்தவா்கள் அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு லட்சுமி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின் பேரில் தூசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com