வந்தவாசி அரிமா சங்கம் சாா்பில் மரக்கன்றுகள் நடும் விழா கீழ்வில்லிவனம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் வி.ஈ.சந்திரசேகரன் தலைமை வகித்தாா். ஊராட்சி மன்றத் தலைவா் சி.வள்ளி, சங்கத்தின் முன்னாள் தலைவா் வே.சிவராமகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதையொட்டி அந்தக் கிராமத்தில் உள்ள திரெளபதியம்மன் கோயில் வளாகத்தைச் சுற்றி மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும், கண் தானம், புற்றுநோய் குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் கிராம நிா்வாக அலுவலா் ராஜீவ், சங்கச் செயலா் கமலக்கண்ணன், பொருளாளா் நாராயணன், உறுப்பினா் நெடுஞ்சேரலாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.