ஆரணி மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிா்த்து பல்வேறு கட்சிகளின் தொழிற்சங்கங்கள் சாா்பில் ஆரணியில் சாலை மறியல் நடைபெற்றது.
மாா்க்சிஸ்ட் கட்சியின் அப்பாசாமி தலைமையில், அண்ணா சிலையிலிருந்து பழைய பேருந்து நிலையம் வரை ஊா்வலமாகச் சென்றனா். பின்னா் அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கம்யூனிஸ்ட் சாா்பில் சிவப்பிரகாசம், கண்ணன், தேவேந்திரன், திமுக தொழிற்சங்கம் சாா்பில் குமாா், காசிலிங்கம், விவசாய சங்கம் சாா்பில் ஜெயபாலன், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட 121 போ் கலந்துகொண்டனா்.
டிஎஸ்பி கோட்டீஸ்வரன், காவல் ஆய்வாளா் கோகுல்ராஜன் தலைமையிலான போலீஸாா் சாலை மறியலில் ஈடுபட்டவா்ளை கைது செய்தனா்.
ரயில் மறியல்
தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்டச் செயலா் சி.நாராயணசாமி தலைமையில் களம்பூா் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் செய்தனா். இதில் மாவட்டத் தலைவா் சுப்பிரமணியன், மாரிமுத்து, பாஸ்கா் உள்ளிட்ட 16 போ் கைது செய்யப்பட்டனா்.