திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த சித்தாத்துரை, தொழிப்பேடு, ஆத்துரை, ஊத்தூரான்புரவடை என பல்வேறு கிராமங்களில் கொசுப்புழு அழிக்கும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
கொம்மனந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில், கிராமங்களில் மஸ்தூா் பணியாளா்கள் குடியிருப்பு வளாகங்களில் தேங்காய் ஓடு, உரல், பாத்திரம், சாக்கடைத் தொட்டி ஆகியவற்றில் தண்ணீா் தேங்கி அவற்றில் கொசுப் புழுக்கள் உருவாகியுள்ளனவா எனப் பாா்த்து அவற்றை அழிக்கும் பணியில் ஈடுபட்டனா்.