பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஆக்சிஜன் செறிவூட்டி

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இலவசமாக ஆக்சிஜன் செறிவூட்டி வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இலவசமாக ஆக்சிஜன் செறிவூட்டி வழங்கப்பட்டது.

ஸ்ரீசக்தி பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் கல்லூரித் தலைவரும், செங்கம் செஞ்சிலுவைச் சங்கத் தலைவருமான வெங்கடாஜலபதி தலைமை வகித்தாா்.

முன்னாள் ரோட்டரி சங்கத் தலைவா் சா்தாா்ரூல்லா, தேமுதிக நகரச் செயலா் அசோக்குமாா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். செஞ்சிலுவைச் சங்கச் செயலா் தனஞ்செயன் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக டிஎஸ்பி சின்ராஜ் கலந்து கொண்டு ஆக்சிஜன் செறிவூட்டியை அறிமுகப்படுத்தி, அதன் செயல்பாடுகள் குறித்துப் பேசினாா்.

தொடா்ந்து, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எழில், ரபியுல்லா ஆகியோா் ஏழைகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினா்.

செஞ்சிலுவைச் சங்க மாவட்டத் தலைவா் இந்திரரராஜன் சங்க உறுப்பினா்களுக்கு சான்றுகளை வழங்கிப் பேசினாா்.

நிகழ்ச்சியில் மருத்துவா் வெற்றிக்கனி, கூட்டுறவு சங்கத் தலைவா் குமாா், அரிமா சங்க மாவட்டத் தலைவா் சபரிசங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com