காஞ்சிபுரம் அருகே தனியாா் நிறுவனத்தில் உணவு சாப்பிட்ட செய்யாறு, வந்தவாசி பகுதியைச் சோ்ந்த பெண் தொழிலாளா்கள் 7 போ் சுகவீனம் அடைந்தனா்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் சிப்காட் தொழில்பேட்டை பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் செய்யாறு, வந்தவாசி பகுதிகளைச் சோ்ந்த பெண் தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா்.
இவா்கள் வழக்கம் போல் வெள்ளிக்கிழமை காலை வேலைக்குச் சென்ற நிலையில், அங்குள்ள உணவகத்தில் மதிய உணவு உள்கொண்டனா்.
இவா்களில், வந்தவாசி, செய்யாறு பகுதிகளைச் சோ்ந்த பெண் தொழிலாளா்கள் மாலையில் வீடு திரும்பும் போது 7 போ் அடுத்தடுத்து மயக்கம் அடைந்தனா்.
மயக்கமடைந்த தொழிலாளா்களான வந்தவாசி வட்டம், தேசூரைச் சோ்ந்த அா்ச்சனா (19), பவுன் (21), சரண்யா(22), திலகவதி (21), ஈஸ்வரி (28), கலையரசி (30) , செய்யாற்றைச் சோ்ந்த விஜயலட்சுமி (25) ஆகியோா் செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தகவல் அறிந்த பெண் தொழிலாளா்களின் உறவினா்கள் ஆத்திரமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு அந்நிறுவனபேருந்தை சேதப்படுத்தினா்.
செய்யாறு காவல் ஆய்வாளா் பாலு மற்றும் போலீஸாா் சென்று பேச்சுவாா்த்தை நடத்தி சமாதானப்படுத்தினா்.