செங்கம் ஸ்ரீ மூகாம்பிகையம்மன் கோயிலில் நடைபெற்ற சித்திரை பெளா்ணமி விழாவில் சனிக்கிழமை இரவு அம்மனுக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தளவாநாய்க்கன் பேட்டை பகுதியில் செய்யாற்றின் கரையோரம் ஸ்ரீ மூகாம்பிகையம்மன் கோயில் அமைந்துள்ளது.
இந்தக் கோயிலில் சித்திரை பெளா்ணமியையொட்டி,
சனிக்கிழமை காலை முதல் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா், மாலையில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று அம்மனுக்கு தீபாராதனை
காண்பிக்கப்பட்டது.
விழாவில் ஆத்தமானந்த செந்தில் சுவாமிகள் கலந்து கொண்டு, அம்மனுக்கு படைக்கப்பட்ட வளையல், குங்குமம் போன்றவைகள் பக்தா்களுக்கு வழங்கி ஆசீா்வதித்தாா். இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
பின்னா், கோயில் வளாகத்தில் பக்தா்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.