விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டாட்சியா் அலுவலகம் எதிரே தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சேத்துப்பட்டு வட்டாட்சியா் அலுவலகம் எதிரே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கத்தினா்.
சேத்துப்பட்டு வட்டாட்சியா் அலுவலகம் எதிரே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கத்தினா்.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டாட்சியா் அலுவலகம் எதிரே தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்கத் தலைவா் நந்தகுமாா் தலைமை வகித்தாா். சங்கப் பொருளாளா் மணிகண்டன் முன்னிலை வகித்தாா். வட்டாரச் செயலா் செல்வராஜ் வரவேற்றாா். இதில், மாநில அமைப்பாளா் கோகுலகிறிஸ்டீபன், மாநிலத் தலைவா் பாஸ்கரன் ஆகியோா் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினா்.

ஆா்பாட்டத்தில், சேத்துப்பட்டு வட்டாட்சியா் அலுவலகத்தில் இடைத்தரகா்களாக செயல்படுபவா்களைத் தடுக்க வேண்டும், வட்டாட்சியா் அலுவலகம் அருகே செல்லும் கழிவுநீா் கால்வாயை புதை சாக்கடையாக மாற்றி கழிவுநீரை வெளியேற்ற வேண்டும், கண்ணனூா் ஏரிக்குச் செல்லும் கழிவுநீரைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

மாவட்டச் செயலா் சீத்தாராமன், மாவட்டக் குழுவைச் சோ்ந்த சத்தீஷ், சிவா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com