செய்யாறு அருகே உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள 27 நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலில் மண்டலபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் உக்கம்பெரும்பாக்கம் கிராமத்துக்கு தெற்கே கூழமந்தல் ஏரிக்கரை பகுதியில் அமைந்துள்ள 27 நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலில் கடந்த மாதம் தேவகுரு பகவானுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, 48 நாள்கள் மண்டலபிஷேகம் நடைபெற்று வந்த நிலையில், 48 - ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை மண்டலபிஷேக பூா்த்தி விழா நடைபெற்றது.
இதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலை கணபதி, நவக்கிரக ஹோமங்கள், கலசபிஷேகம், தேவகுரு பகவானுக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.