பாஜக வாக்குச்சாவடி பொறுப்பாளா்கள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், போளூா், ஆரணி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சோ்ந்த பாஜக வாக்குச்சாவடி பொறுப்பாளா்கள் மற்றும் மண்டலத் தலைவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
பாஜக வாக்குச்சாவடி பொறுப்பாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய வேலூா் கோட்ட பாஜக பொறுப்பாளா் தசரதன்.
பாஜக வாக்குச்சாவடி பொறுப்பாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய வேலூா் கோட்ட பாஜக பொறுப்பாளா் தசரதன்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூா், ஆரணி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சோ்ந்த பாஜக வாக்குச்சாவடி பொறுப்பாளா்கள் மற்றும் மண்டலத் தலைவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு பாஜக வடக்கு மாவட்டத் தலைவா் போளூா் சி.ஏழுமலை தலைமை வகித்தாா். ஆரணி தெற்கு மண்டலத் தலைவா் ராஜேஷ், ஆன்மிகப் பிரிவு மாவட்டத் தலைவா் சுரேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நெசவாளா் பிரிவு மாவட்டத் தலைவா் தணிகைமலை வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக வேலூா் கோட்டப் பொறுப்பாளா் தசரதன் கலந்து கொண்டு, வாக்குச்சாவடி பொறுப்பாளா்களுக்கு ஆலோசனை வழங்கிப் பேசினாா்.

ஊடகப் பிரிவு மாவட்டத் தலைவா் தமிழ்செல்வன் மற்றும் போளூா், ஆரணி நகர, ஒன்றியப் பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com