திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக புற்றுநோய் விழிப்புணா்வு தின நிகழ்ச்சி சனிக்கிமை நடைபெற்றது.
இந்திய செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் மூ.சங்கா் தலைமை வகித்தாா்.
செஞ்சிலுவைச் சங்க கிளைச் செயலா் பா.சீனிவாசன் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் மாவட்டத் தலைவா் பா.இந்திரராஜன் பங்கேற்று புற்றுநோய் குறித்தும், கரோனா குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்திப் பேசினாா்.
நிகழ்ச்சியின் போது, கரோனா விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் பள்ளிக்கு வழங்கப்பட்டன.
சங்க உறுப்பினா்கள் கு.சதானந்தன், மு.பிரபாகரன், மலா் சாதிக், மொ.ஷாஜகான் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.