போளூா் பேரூராட்சி 5-ஆவது வாா்டில் பெண் வேட்பாளா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.
போளூா் சிறப்புநிலை பேரூராட்சி 18 வாா்டுகள் கொண்டதாகும். நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வாக்குப்பதிவு பிப்.19-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த நிலையில், ஜனவரி 28-ஆம் தேதி முதல் திமுக, அதிமுக, பாமக என பல்வேறு கட்சிகளைச் சாா்ந்தவா்கள் மற்றும் சுயேச்சையாகவும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா்.
இதைத் தொடா்ந்து, வேட்புமனு பரிசீலனை பிப்.5-ஆம் தேதி நடைபெற்றது. 7-ஆம் தேதி மனு வாபஸ் நடைபெற்றது. இதில் 5-ஆவது வாா்டில் அதிமுக மற்றும் மேலும் ஒருவா் என 2 வேட்பாளா்கள் தங்களது வேட்புமனுவை வாபஸ் பெற்றனா்.
இதனால், திமுக வேட்பாளா் உமாமகேஸ்வரி பாபு போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.