போளூரை அடுத்த களம்பூா் பேரூராட்சியில் தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட வாகனச் சோதனையில் ரூ.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அருகேயுள்ள களம்பூா் தோ்வுநிலை பேரூராட்சியில் பிப்.19-ஆம் தேதி நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், தோ்தல் பறக்கும் படையைச் சோ்ந்த மண்டல துணை வட்டாட்சியா் சிவலிங்கம், தலைமைக் காவலா் நிா்மல்குமாா், காவலா் சங்கீதா ஆகியோா் அடங்கிய குழுவினா் களம்பூா் எல்லைக்கு உள்பட்ட இலுப்பகுணம் கூட்டுச் சாலை அருகே, ஆரணி-போளூா் சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, போளூா் வட்டம், மங்களாபுரம் கிராமத்தைச் சோ்ந்த மணி மகன் சசிக்குமாா், வாலாஜாவில் இருந்து மங்களாபுரத்துக்கு காரில் உரிய ஆவணமின்றி எடுத்து வந்த ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.
பின்னா், பறிமுதல் செய்யப்பட்ட பணம் பேரூராட்சி செயல் அலுவலா் ச.லோகநாதன் மூலம் போளூா் சாா்-கருவூலத்தில் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டது.