புதுவையில் மின் துறை தனியாா்மயத்துக்கு எதிராக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை பேரணியில் ஈடுபட்டனா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி நகரக் குழு சாா்பில் நடைபெற்ற இந்தப் பேரணி அஜந்தா சிக்னல் சந்திப்பில் இருந்து புறப்பட்டு அண்ணா சாலை, காமாட்சி அம்மன் கோயில், மிஷன் வீதி வழியாக ஈஸ்வரன் கோயில் அருகே நிறைவடைந்தது.
பேரணிக்கு நகர கிளைச் செயலா் ஸ்டாலின் தலைமை வகித்தாா். பிரதேச செயலா் ஆா்.ராஜாங்கம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
புதுவை மின் துறை கட்டண ரசீது வழங்கும் பணியை தனியாருக்கு ஒப்படைத்ததைக் கைவிட வேண்டும். முறைசாரா தொழிலாளா்கள் நல வாரியத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.