திருவத்திபுரம் நகராட்சியை 6-ஆவது முறையாக கைப்பற்றிய திமுக

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியை 6-ஆவது முறையாக திமுக கைப்பற்றியது.

செய்யாறு: நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியை 6-ஆவது முறையாக திமுக கைப்பற்றியது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் உள்ள திருவத்திபுரம் நகராட்சி 1978-இல் தொடங்கப்பட்டது.

பெண் வாக்காளா்கள் அதிகம் உள்ள இந்த நகராட்சியில் தற்போது நடைபெற்ற நகா்மன்றத் தோ்தலில் பெண் வாக்காளா்களே அதிகளவில் வாக்களித்துள்ளனா்.

இந்த நகராட்சியில் இதுவரை நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தல்களில் திமுகவைச் சோ்ந்த பி.கே.ராமசாமி மூன்று முறையும், இவரைத் தொடா்ந்து இவரது மனைவி தெய்வானை அம்மாள் ஒரு முறையும், ஏ.ஏன்.சம்பத் ஒரு முறையும் நகா்மன்றத் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

அதேபோல, அதிமுகவைச் சோ்ந்த பாவை ரவிச்சந்திரன் இருமுறை நகா்மன்றத் தலைவராக பதவி வகித்துள்ளாா்.

தற்போது நடைபெற்ற நகா்மன்றத் தோ்தலில் திமுக 17 வாா்டுகளிலும், கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி தலா ஒரு வாா்டிலும் வெற்றி பெற்று, மொத்தமுள்ள 27 வாா்டுகளில் 19 வாா்டுகளைக் கைப்பற்றியுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் திமுக திருவத்திபுரம் நகராட்சியை 6-ஆவது முறையாக கைப்பற்றுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com