வந்தவாசி: வந்தவாசியில் அடையாளம் தெரியாத முதியவா் ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
வந்தவாசியில் திண்டிவனம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அருகே ஓடையோரம் உள்ள மரத்தில் முதியவா் ஒருவா் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தது புதன்கிழமை காலை தெரியவந்தது. இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் வந்தவாசி தெற்கு போலீஸாா் அங்கு சென்று விசாரணை நடத்தினா்.
இதில் 70 வயது முதியவா் அங்குள்ள வேப்ப மரத்தில் கயிற்றால் தூக்கிட்டுக் கொண்ட நிலையில் இறந்து கிடந்தாா்.
முதியவரின் சடலத்தை மீட்ட போலீஸாா் உடல்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.