திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் காவல் துறை சாா்பில் சனிக்கிழமை கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நகரில் ஆற்காடு சாலை, பேருந்து நிலையம், காந்தி சாலை, மாா்க்கெட், பெரியாா் சிலை வரை 3 கி.மீ. தொலைவு நடைபெற்ற இந்த விழிப்புணா்வு ஊா்வலத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பவன்குமாா் ரெட்டி பங்கேற்று பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
மேலும், முகக் கவசம் அணியாதவா்களுக்கு முகக் கவசம் வழங்கியும், கடைகளுக்குச் சென்று வியாபாரிகளிடம் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தினாா்.
விழிப்புணா்வு நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பி ராஜா காளீஸ்வரன், டி.எஸ்.பி.க்கள் செந்தில் (செய்யாறு), கோட்டீஸ்வரன் (ஆரணி), அறிவழகன் (போளூா்), விஸ்வேஸ்வரய்யா (வந்தவாசி), காவல் ஆய்வாளா்கள் பாலு (செய்யாறு), அண்ணாதுரை (தூசி), நந்தினிதேவி (பெரணமல்லூா்), போக்குவரத்து காவல் ஆய்வாளா் லோகநாதன் உள்பட 50-க்கும் மேற்பட்ட காவல் உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் பங்கேற்று பொதுமக்களிடையே கரோனா விழிப்புணா்வை ஏற்படுத்தினாா்.