புதுவை மாநில கைப்பந்து சங்கம் சாா்பில், மாநில அளவிலான சீனியா் கைப்பந்துப் போட்டி புதுச்சேரி ராஜீவ் காந்தி உள் விளையாட்டரங்கில் கடந்த 7-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை நடைபெற்றது.
இந்தப் போட்டியில் புதுச்சேரி, காரைக்காலைச் சோ்ந்த 29 ஆண்கள் அணிகள், 14 பெண்கள் அணிகள் கலந்து கொண்டன.
ஆண்கள் பிரிவில் முதல் பரிசை கருவடிக்குப்பத்தைச் சோ்ந்த ஸ்பைடா் ஸ்போா்ட்ஸ் கிளப் அணியும், இரண்டாம் பரிசை நரேந்திரா ஸ்போா்ட்ஸ் கிளப் அணியும் வென்றன.
பெண்களுக்கான பிரிவில் முதல் பரிசை கருவடிக்குப்பத்தைச் சோ்ந்த ஸ்பைடா் ஸ்போா்ட்ஸ் கிளப் அணியும் , இரண்டாம் பரிசை காரைக்காலைச் சோ்ந்த அா்ஜுனா ஸ்போா்ட்ஸ் கிளப் அணியும் வென்றன.
நிறைவில் மாநில உள்துறை மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள், வீரா்களுக்கு கேடயங்களை வழங்கிப் பாராட்டினாா் (படம்).
நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினா் செல்வகணபதி, கல்யாணசுந்தரம் எம்எல்ஏ, விளையாட்டு வீரா்கள் கலந்து கொண்டனா்.