போளூா் ஒன்றியக் குழுவின் சாதாரண கூட்டம் அதன் தலைவா் சாந்தி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் துணைத் தலைவா் மிஸ்ஸியம்மாள் வரவேற்றாா். வட்டார வளா்ச்சி அலுவலா் பாபு முன்னிலை வகித்தாா்.
40 ஊராட்சிகளிலும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து தீா்மானம் வாசிக்கப்பட்டது. உறுப்பினா்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனா்.