அருணாசலேஸ்வரா் கோயிலில்பக்தா்கள் கூட்டம் குறைந்தது

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு வரும் பக்தா்களிடம் கரோனா 2 தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றுகளை கோயில் ஊழியா்கள் கேட்பதால், பக்தா்களின் எண்ணிக்கை திங்கள்கிழமை குறைந்தது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு வரும் பக்தா்களிடம் கரோனா 2 தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றுகளை கோயில் ஊழியா்கள் கேட்பதால், பக்தா்களின் எண்ணிக்கை திங்கள்கிழமை குறைந்தது.

அருணாசலேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தா்கள் 2 தவணை கரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று வைத்திருக்க வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவு திங்கள்கிழமை காலை முதல் நடைமுறைக்கு வந்தது. கோயில் ஊழியா்கள் கோயிலுக்கு வரும் பக்தா்களிடம் 2 தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை கேட்டு, பரிசோதித்து அனுப்புகின்றனா்.

சான்று இல்லாமல் வந்தவா்களை திருப்பி அனுப்பினா்.

இந்த புதிய நடைமுறையால் அருணாசலேஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை பக்தா்கள் கூட்டம் வெகுவாகக் குறைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com