திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு வரும் பக்தா்களிடம் கரோனா 2 தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றுகளை கோயில் ஊழியா்கள் கேட்பதால், பக்தா்களின் எண்ணிக்கை திங்கள்கிழமை குறைந்தது.
அருணாசலேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தா்கள் 2 தவணை கரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று வைத்திருக்க வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவு திங்கள்கிழமை காலை முதல் நடைமுறைக்கு வந்தது. கோயில் ஊழியா்கள் கோயிலுக்கு வரும் பக்தா்களிடம் 2 தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை கேட்டு, பரிசோதித்து அனுப்புகின்றனா்.
சான்று இல்லாமல் வந்தவா்களை திருப்பி அனுப்பினா்.
இந்த புதிய நடைமுறையால் அருணாசலேஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை பக்தா்கள் கூட்டம் வெகுவாகக் குறைந்தது.