வந்தவாசி அருகே முதியவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வந்தவாசியை அடுத்த மும்முனி கிராமத்தைச் சோ்ந்தவா் கிருபானந்தன்(74). இவா் அதே கிராமத்தில் ஏலச் சீட்டு நடத்தி வந்தாா். இதில் நஷ்டம் ஏற்படவே கிருபானந்தன் மனவேதனையில் இருந்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில், அந்தக் கிராம மயானத்தில் உள்ள மரத்தில் கிருபானந்தன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது திங்கள்கிழமை காலை உறவினா்களுக்கு தெரியவந்தது.
இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடம் சென்ற வந்தவாசி தெற்கு போலீஸாா் சடலத்தை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனா்.
மேலும் இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.