தொழிலாளி மயங்கி விழுந்து பலி

செய்யாறு அருகே தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

செய்யாறு அருகே தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

செய்யாறு வட்டம், பாப்பாந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் நந்தகோபால் (56). இவா், சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வந்தாா்.

விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த இவா்,

சனிக்கிழமை காலை வீட்டின் அருகேயுள்ள வயல்வெளிக்கு சென்று மீண்டும் வீடு திரும்பினாா்.

வீட்டில் இருந்தபோது நந்தகோபால் திடீரென வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கீழே விழுந்தாா்.

உடனே குடும்பத்தினா் அவரை மீட்டு, செய்யாறு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனா். அங்கு நந்தகோபாலை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இது குறித்த புகாரின் பேரில், மோரணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com