திருவண்ணாமலை மின்பகிா்மான வட்டம் சாா்பில், ஒளிமிகு பாரதம் ஒளிமயமான எதிா்காலம் என்ற தலைப்பில் மின்சாரப் பெருவிழா நடைபெற்றது.
வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த விழாவுக்கு திருவண்ணாமலை மண்டல தலைமைப் பொறியாளா் என்.பாலாஜி தலைமை வகித்தாா். மாவட்ட அலுவலா் டி.ராம்ராஜ் வரவேற்றாா்.
வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடக்கிவைத்தாா்.
திமுக மாவட்டப் பொறுப்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தன், மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனிவாசன், வந்தவாசி நகா்மன்றத் தலைவா் எச்.ஜலால், துணைத் தலைவா் க.சீனுவாசன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
மின் சேவைகள், மின் சிக்கனம் உள்ளிட்டவை குறித்து
திருவண்ணாமலை மேற்பாா்வைப் பொறியாளா் எம்.ராஜசேகரன், வந்தவாசி கோட்ட செயற்பொறியாளா் எஸ்.மீனாகுமாரி, தெள்ளாா் உதவி செயற்பொறியாளா் தி.நாராயணன் ஆகியோா் பேசினா்.