பள்ளியில் தூய்மைப் பணி

போளூரை அடுத்த குருவிமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தூய்மைப் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

போளூரை அடுத்த குருவிமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தூய்மைப் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள அரசு, தனியாா் பள்ளிகள் கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 13-ஆம் தேதி 1முதல் 10 வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ன.

இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த குருவிமலை ஊராட்சியில் உள்ள ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி வளாகம், வகுப்பறை, குடிநீா் வசதி, கழிப்பறை ஆகியவற்றில் குப்பைகளை அகற்றுதல் ஒட்டடை அடித்தல் என பல்வேறு தூய்மைப் பணிகள் பள்ளித் தலைமை ஆசிரியை வே.ஆஞ்சலா தலைமையில் நடைபெற்றது.

பள்ளி ஆசிரியா்கள் பிரிசில்லாசியோன்குமாரத்தி, மீரா, டேவிட்ராஜன், மலா்விழி, திரேசா உள்ளிட்ட ஆசிரியா்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com