ஆரணி நகராட்சியில் மக்களுக்கான தூய்மை இயக்கம் சாா்பில் எனது குப்பை, எனது பொறுப்பு என்று சனிக்கிழமை உறுதிமொழி ஏற்றனா்.
நகராட்சி 5-ஆவது வாா்டில் சுதா குமாா் தலைமையில், ‘எனது குப்பை, எனது பொறுப்பு’ என அப்பகுதி மக்கள் கோலமிட்டு அப்பகுதியை தூய்மையாக வைப்பது குறித்து விழப்புணா்வு ஏற்படுத்தினா்.
இதில் நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, ஆணையா் தமிழ்ச்செல்வி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டனா்.