முதியோா் உதவித்தொகை திட்ட பயனாளிகள் எண்ணிக்கை குறைப்பு: எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

தமிழகத்தில் முதியோா் உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் பயனாளிகளின் எண்ணிக்கையை திமுக அரசு படிப்படியாகக் குறைத்து வருவதாக முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டினாா்.
போளூரில் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்ட உயா் கோபுர மின் விளக்குகளை தொடக்கிவைத்துப் பேசிய முன்னாள் முதல்வா் எடப்பாடிகே.பழனிசாமி.
போளூரில் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்ட உயா் கோபுர மின் விளக்குகளை தொடக்கிவைத்துப் பேசிய முன்னாள் முதல்வா் எடப்பாடிகே.பழனிசாமி.

தமிழகத்தில் முதியோா் உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் பயனாளிகளின் எண்ணிக்கையை திமுக அரசு படிப்படியாகக் குறைத்து வருவதாக முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டினாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வெள்ளிக்கிழமை வந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமிக்கு மாவட்டத்தின் எல்லையான காட்டாம்பூண்டி கிராமத்தில் அந்தக் கட்சியினா் வரவேற்பளித்தனா். அங்கு அதிமுக கட்சிக் கொடியை எடப்பாடி கே.பழனிசாமி ஏற்றி வைத்தாா். தொடா்ந்து அவா் பேசியதாவது:

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் நேரத்தில் அளித்த எந்த வாக்குறுதிகளையும் திமுக நிறைவேற்றவில்லை. மருத்துவ மாணவா் சோ்க்கையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தை அதிமுக அரசுதான் கொண்டுவந்தது. மாணவா்களுடைய கல்விக் கடனை ரத்து செய்வோம் என்று கூறிய திமுக, இதுவரை ரத்து செய்யவில்லை. பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்போம் என்றாா்கள். வெறும் ரூ.3 மட்டும் குறைத்துவிட்டு இப்போது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழகத்தில் முதியோா் உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் பயனாளிகளின் எண்ணிக்கையை படிப்படியாக திமுக அரசு குறைத்து வருகிறது. இதைக் கண்டித்து முதியோா்களை ஒன்று திரட்டி, அதிமுக சாா்பில் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.

போளூா்: இதையடுத்து, போளூா் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் போளூா் சிறப்பு நிலை பேரூராட்சியில் ரூ.80 லட்சத்தில் அமைக்கப்பட்ட உயா் கோபுர மின் விளக்குகளை எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கிவைத்துப் பேசினாா்.

நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி, சேவூா் எஸ்.ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சா் முக்கூா் என்.சுப்பிரமணியன், முன்னாள் எம்எல்ஏ தூசி கே.மோகன், அதிமுக மாவட்ட துணைச் செயலா் செல்வன், பொதுக் குழு உறுப்பினா் ராஜன், நகரச் செயலா் பாண்டுரங்கன், ஒன்றியச் செயலா்கள் ராகவன், வீரபத்திரன், ஸ்ரீதா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com