சாலை விபத்தில் அரசுக் கருவூலக ஊழியா் பலி

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே புதன்கிழமை இரவு நேரிட்ட சாலை விபத்தில் அரசுக் கருவூலக ஊழியா் பலியானாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே புதன்கிழமை இரவு நேரிட்ட சாலை விபத்தில் அரசுக் கருவூலக ஊழியா் பலியானாா்.

செங்கம் தளவாநாய்க்கன்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் மகேஸ்வரன்(45), ஓய்வு பெற்ற ராணுவ வீரா். இவா், திருவண்ணாமலை கருவூலத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா்.

அதே அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வருபவா் செங்கம் பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்த சங்கா்.

இருவரும் புதன்கிழமை பணி முடிந்து இரு சக்கர வாகனத்தில் செங்கம் திரும்பிக் கொண்டிருந்தனா்.

பாய்ச்சல் பகுதியில் வரும்போது இரு சக்கர வாகனம் லாரியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், மகேஸ்வரன் சம்பவ இடத்திலே உயிரிழந்தாா்.

பலத்த காயமடைந்த சங்கரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதுகுறித்து பாய்ச்சல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com