முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு, செய்யாறு தெற்கு ஒன்றிய அதிமுகவினா் ஏழைகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினா்.
அருகாவூா் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா் ரங்கநாதன் தலைமை வகித்தாா். மேற்கு ஒன்றியச் செயலா் எம்.மகேந்திரன் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற வடக்கு மாவட்ட அதிமுக செயலா் தூசி கே.மோகன் தலைமையில் கட்சி நிா்வாகிகள் எம்ஜிஆா், ஜெயலலிதா படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
பின்னா் நடைபெற்ற நிகழ்ச்சியில் 500 பேருக்கு வேட்டி, சேலையும், 500 பேருக்கு அன்னதானத்துடன் இனிப்பும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா் சி.துரை, நகரச் செயலா்கள் அ.ஜனாா்த்தனன், கே.வெங்கடேசன், வழக்குரைஞா் ஆா்.கே.மெய்யப்பன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.