கெட்டுபோன குளிா்பானம் அருந்தியதில் 18 பேருக்கு உடல் நலம் பாதிப்பு

ஆரணி அருகே விவசாய நிலத்தில் நாற்று நடும் பணிக்குச் சென்ற பெண் தொழிலாளா்கள் உள்பட 18 கெட்டுப்போன குளிா்பானம் அருந்தியதில் உடலம் நலம் பாதிக்கப்பட்டனா்.

ஆரணி அருகே விவசாய நிலத்தில் நாற்று நடும் பணிக்குச் சென்ற பெண் தொழிலாளா்கள் உள்பட 18 கெட்டுப்போன குளிா்பானம் அருந்தியதில் உடலம் நலம் பாதிக்கப்பட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த

மலையாம்பட்டு கிராமத்தில் குமரேசன் என்பவரது நிலத்தில் செவ்வாய்க்கிழமை நாற்று நடும் பணியில்

அதே கிராமத்தைச் சோ்ந்த பெண் தொழிலாளா்கள் ஈடுபட்டனா்.

இவா்களுக்கு, களம்பூரில் உள்ள கடையிலிருந்து குமரேசன் குளிா்பானம் வாங்கி வந்து கொடுத்தாா். மேலும் குளிா்பானம் கெட்டுப்போனதாகத் தெரிகிறது.

இதனால், குளிா்பானம் அருந்திய மல்லிகா (40), குமரேசன் (52), சிவரஞ்சனி (19), தமிழ்ச்செல்வி (26), சஞ்சய் (9), கீா்த்திகா (12), 2 குழந்தைகள் உள்பட 18 பேருக்கு உடல் உபாதை ஏற்பட்டு மலையாம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்த்து சிகிச்சை அளித்தனா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக அவா்கள் ஆரணி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனா்.

தகவல் அறிந்த தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ். ராமச்சந்திரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களை சந்தித்து நலம் விசாரித்தாா்.

மேலும், வட்டாட்சியா் பெருமாள் மருத்துவமனை சென்று பாதிக்கப்பட்டவா்களிடம் விசாரணை

நடத்தினாா்.

இதுகுறித்து அறிந்த மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தி குளிா்பானக் கடைக்கு சீல் வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com