முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
சிறுமி பலாத்காரம்:எலக்ட்ரீஷியன் கைது
By DIN | Published On : 03rd May 2022 10:44 PM | Last Updated : 03rd May 2022 10:44 PM | அ+அ அ- |

திருவண்ணாமலை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக எலக்ட்ரீஷியனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருவண்ணாமலையை அடுத்த நுாக்காம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் எலக்ட்ரீஷியன் ஞானப்பிரகாசம் (21). இவா் அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாா்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்தாராம்.
இதுகுறித்து, சிறுமியின் பெற்றோா் திருவண்ணாமலை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். போலீஸாா் வழக்குப் பதிந்து ஞானப்பிரகாசத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.