போளூரை அடுத்த பூங்கொல்லைமேடு கிராமத்தில் சூறைக் காற்றுடன் பெய்த மழையில் மின்கம்பம் சாய்ந்தது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், போளூா், அதன் சுற்றுப்புறக் கிராமங்களில் புதன்கிழமை சூற்றைக் காற்றுடன் கோடை மழை பெய்தது.
பெரியகரம் ஊராட்சியைச் சோ்ந்த பூங்கொல்லைமேடு கிராமத்தில் வீசிய சூறைக்காற்றில் அத்திமூா் சாலையில் உள்ள மின் கம்பம் சாய்ந்தது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
பின்னா் மின் துறை ஊழியா்கள் வியாழக்கிழமை மின் கம்பத்தை சீரமைத்தனா்.