திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் வசிக்கும் பழங்குடியினா், மாற்றுத் திறனாளிகள், கணவரால் கைவிடப்பட்டோா் உள்ளிட்டோருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கம் சாா்பில், வட்டாட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
செய்யாறு வட்டாட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்க வட்டாரச் செயலா் எம்.பிரியா தலைமை வகித்தாா். வட்டார நிா்வாகிகள் சந்திரா, விஜயா, மஞ்சுளா, வேளியம்மாள் ஆகியோா் முன்னிலை வகித்தாா்.
இதில், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா்கள் சங்க மாவட்டச் செயலா் தங்கராஜ், மாவட்ட நிா்வாகிகள் எம்.வெங்கடேசன், ரகமத்துல்லா, என்.பத்ராச்சலம், கிருஷ்ணவேணி, நம்பிராஜன், ஆரிப் உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். இதையடுத்து, வட்டாட்சியா் அலுவலகத்தில் குடியேற முயன்ற அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.
இதைத் தொடா்ந்து, செய்யாறு வட்டம், வளா்புரம் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கும், செய்யாறு நகா்ப் பகுதியில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகள், விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோா், வாடகை வீடுகளில் வசிப்போருக்கும் வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி, செய்யாறு வட்டாட்சியரிடம் அவா்கள் கோரிக்கை மனு அளித்தனா்.